திருவள்ளூர், ஏப் 20- ஒன்றிய மாநில அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை, கன்னியாகுமாரி, கோவை, புதுச்சேரி என நான்கு மையங்களில் இருந்து வியாழக் கிழமை (ஏப்.21) சைக்கிள் பிரச்சாரம் துவங்குகிறது. கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 7 இடங்களில் இருந்து புறப்படும் உப பயணக் குழுக்களும் இதில் இணைகின்றன. அனைத்து குழுக்க ளும் திருச்சியில் சங்கமிக்க உள்ளன. இந்நிலையில் புதனன்று (ஏப் 20) கும்மிடிப்பூண்டியில் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா துவக்கி வைத்தார். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும், காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி துறைமுகத்தில் இளை ஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், காக்களூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தொழிற்பேட்டைகளில் அப்பகுதி இளைஞர்களுக்கு பணிபாதுகாப் புடன் வேலை வழங்க வேண்டும், பழவேற்காடு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றி வேலை வாய்ப்பு களை உருவாக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பிரச்சார பயணம் நடை பெற்றது. இதில் அவர் பேசியதா வது, வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கக்கோரி வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை, கன்னி யாகுமாரி, கோவை, புதுச்சேரி என நான்கு மையங்களில் இருந்து வியாழக்கிழமை (ஏப்.21) சைக்கிள் பிரச்சாரம் துவங்குகிறது. கும்மிடிப் பூண்டி உள்ளிட்ட 7 இடங்களில் இருந்து புறப்படும் உப பயணக் குழுக்களும், இதில் சங்கமிக்கின்றன.
இந்த குழுக்கள் அனைத்தும், திருச்சியில் மே 1ஆம் தேதி அன்று பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் சங்கமத்தோடு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளன ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சாரம் நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்போம் என 2014ஆம் ஆண்டு மோடி அறிவித்து ஆட்சிக்கு வந்தார். எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 16 கோடி இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வேலை கேட்டால், பக்கோடா விற்று பிழைக்கலாம் என மோடி சொல்கிறார். மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எல்லா எண்ணெய் வித்துக்களின் விலைகள் ஏறி போனதால் பக்கோடா கூட விற்பனை செய்து பிழைப்பு நடத்த முடியாத நிலையில் மோடி அரசாங்கம் உள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு புதியதாக வேலை தேடி வருகின்ற னர். சென்னையில் கண்ணன் என்ற 24 வயது பட்டதாரி இளைஞன் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இப்படி கண்ணன் மட்டுமல்ல இந்தி யாவில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் தான் அதிகம் என்பது வருத்தமளிக்கிறது. தற்போது எல்லா கல்வி நிலை யங்களிலும் சமஸ்கிருதம் படிக்க சொல்லுகிறார்கள் அதற்காக 50 ஆயிரம் சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழி லாளி 1234-கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்யவேண்டிய அவல நிலையை நாடு கண்டது. ஆனால் பிரதமர் மோடி பயணிக்க மட்டும் ரூ.1500 கோடி செலவில் 4 ஜோடி கார்களை வாங்குகின்றனர்.
மக்களின் அவசியமான பிரச்சி னைகளை முன்னெடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் இந்த மகத்தான பிரச்சார பயணம் நடைபெறவுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜ யன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் இ.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.தேவேந்திரன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.கலையரசன், பகுதி நிர்வாகிகள் முனிரத்தினம், லோகநாதன், சாலி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டியில் துவக்கிய சைக்கிள் பிரச்சார பயணம் கவரைப் பேட்டை, தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு சென்று மீஞ்சூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழி நெடுகிலும் சிஐடியு, மாணவர்சங்கம், சிபிஎம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.