districts

img

வேட்டைக்காரன் இன மக்களையும் எஸ்.டி பட்டியலில் சேர்க்க கோரிக்கை

திருவள்ளூர், நவ.3- வேட்டைக்காரன் இனத்தவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க  வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 5 புதிய கிளைத்  திறப்பு விழா  திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. திருவள்ளூர் அருகில் உள்ள மணமேடு, திருமணம்,  வேப்பம்பட்டு, மெய்யூர். செம்பேடு ஆகிய 5 கிராமங்களில் பெயர் பலகைகளை மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை கொடியேற்றி  வைத்து பேசினார். அகில இந்திய ஆதிவாசி கள் மேடையின் மத்திய குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம்,  மாநிலத் துணைத் தலைவர்  ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணாயிரம் மாவட்டத் தலைவர் டி.டில்லி,  மாவட்டச் செயலாளர் ஜி .ராஜா,  பொரு ளாளர் சுரேஷ் மற்றும்  வேட்டைக்காரன் இன மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்ட னர். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர்  பி.டில்லிபாபு பேசுகையில், நரிக்குற வர்களையும், வேட்டைக்காரன் இனத்தவர்க ளையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி  வருகிறோம்.திமுக தனது தேர்தல் வாக்குறுதியும் அளித்தது. ஆனால் தமிழக  அரசு நரிக்குறவர்களை மட்டும் பழங்குடி  பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு  பரிந்துரை செய்தன் மூலம் பழங்குடியின பட்டியலில் நரிக்குறவர்களை இணைத் துள்ளனர். அதை  வரவேற்கிறோம். அதே போல வேட்டைக்காரன் இன மக்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும்.  பழங்குடி மக்கள் ஆராய்ச்சி மைய இயக்குநர் (ஊட்டி) தலைமையில்   கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் மாநில அரசு,  ஒன்றிய அரசுக்கு  வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி யின பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்ய  வேண்டும் எனவும்  டில்லிபாபு வலியுறுத்தி னார்.