districts

நள்ளிரவில் பலத்த மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர், அக்.9-  தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.   சென்னையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதே போல் புறநகர் பகுதி களில்  மழை பெய்து வரு கிறது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம் பேடு, மதுரவாயல், போரூர் பெரம்பூர், வியாசர்பாடி, திரு வொற்றியூர், மணலி, மாதவரம், திருவான்மியூர், ராயபுரம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர், கொளத்தூர், கொடுங்கை யூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதே போல் திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டத்திலும் மழை நீடித்தது. தாம்பரம், பள்ளிக்கரணை, வண்டலூர், ஆலந்தூர், கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  அச்சரப்பாக்கம், மதுராந்தகம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதி களில் கன மழை கொட்டி தீர்த்தது. திரு வள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.கே. பேட்டையில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:- பள்ளிப்பட்டு - 10 சோழவரம் - 16 பொன்னேரி - 27 செங்குன்றம் - 32 ஜமீன்கொரட்டூர் - 5 பூந்தமல்லி - 4 திரு வாலங்காடு - 35 திருத்தணி -52 தாமரைப்பாக்கம்-3 திருவள்ளூர்-9 தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  புழல் ஏரிக்கு ஞாயிறு காலை நிலவரப்படி 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புழல் ஏரியின் மொத்த கொள்ள ளவு 3300 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் 2661 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 196 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

;