districts

பச்சை பயிறு கிலோ ரூ.72.75 விலையில் கொள்முதல் செய்ய ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர், ஏப்.22 - பச்சை பயிறு கிலோ 72 ரூபய் 75பை சாவுக்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சை பயறு சாகுபடி  திட்டத்தின் கீழ் 3000 எக்டேர் பரப்பிலும், தனிப்பயிராக 9644 எக்டேர் பரப்பிலும் என 12 ஆயிரத்து 644 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நலன் கருதி குறைந்தபட்ச ஆதார விலையில் கிலோ 72 ரூபாய் 75பைசாவிற்கு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தர குறியீட்டின்படி கிலோ ஒன்றுக்கு 72 ரூபாய் 75 பைசா என்ற விலைக்கு மத்திய  அரசு நிறுவனமான நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளுர், செங்குன்றம் மற்றும் ஊத்துக் கோட்டை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடப்பு பருவத்தில்  தலா 100 மெ.டன் வீதம் 300 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டம் மே மாதம் 15 வரை மட்டுமே செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும்  விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கிக் கணக்குப் புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விளைபொருளுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் விற்பனைக்குழு செயலாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஆகி யோரை அணுக வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.