திருவள்ளூர், மார்ச் 17- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையத்தை சேர்ந்த அப்பள தொழிலாளி பிரதீப் குமார்- செல்வி தம்பதியரின் மகன் அபிஷேக் ராஜன். 3ஆம் வகுப்பு படிக்கும் போதே சிலம்பத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் போட்டிகளின் கலந்து கொண்டு பல விருதுகளை அபிஷேக் வென்றுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக மாநில அளவில் 6 விருதுகளை அபி ஹேக்ராஜன் பெற்றுள்ளார். இவரது சகோதரி நான்சி எஸ்தரும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விருது கள், சான்றிதழ்கள் பெற்றுள் ளார். இந்த நிலையில் சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் ஒற்றை கொம்பு போட்டியில் 11-13 வயதிற்கு உட்பட்ட பிரிவில் அபிஹேக் ராஜன் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இவருடைய சகோதரி நான்சி எஸ்தர் 15-17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த தகவல் அறிந்து அபிஹேக்ராஜன், நான்சி எஸ்தர் ஆகியோரை திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைத்து புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சிலம்பம் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், மற்றும் மாநில தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கான செலவு களை மாநில அரசு ஏற்க வேண்டும் என அபிஷேக் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.