districts

img

கடல் அரிப்பால் எண்ணூர் துறைமுகம், பழவேற்காடு சாலையை மூடிய மணல்

திருவள்ளூர், டிச 11- எண்ணூர் காமராஜர் துறைமுகம், பழவேற்காடு சாலை, கடல் மண் அரிப்பால் மூடப்பட்டது.திரு வள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி - பழவேற்காடு இடையே கருங்காலி என்னுமிடத்தில் கனமழைகாரணமாக கடல் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கடல் மண் அரிப்பால் சாலை முற்றிலும் மூடப்பட்டது. இதனால் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி,எண்ணூர், சென்னைக்கும் காட்டுப்பள்ளியில் இருந்து பழவேற்காடு,பொன்னேரி, ஆந்திர மாநிலத்திற்கும் செல்லக்கூடிய பயணிகளும் பணிக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பழவேற்காட்டில் இருந்து காட்டூர், மீஞ்சூர்,வடசென்னை அனல் மின் நிலையம் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூர்ந்துள்ள மணலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள்ளாட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த இடத்தில் கடல் அலைகளால் மணல் தூர்ந்து அடைபடுவதுமாக இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் மேம்பாலம் ஒன்று அமைத்துக் கொடுத்து நிரந்த தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.