திருவள்ளூர், ஜூன் 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் எதிரொலியாக 27 ஆண்டுகளாக நீடித்து வந்த ராஜா நகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு குடிமனை பட்டா அளவீடு செய்து ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை வட்டம், ராஜா நகரம் ஆதிதிராவிட காலனியில் 180 வீடுகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசிக் கின்ற நிலையில் மாற்று இடம் வழங்க வேண்டும் என அம்மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து 1994-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா க 67 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். 2002 ஆம் ஆண்டு திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நரசிம்மன் 40 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி னார். ஆக மொத்தம் ஒரு நபர் ஒன்றுக்கு 3 செண்ட் வீதம் 107 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 27 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வீட்டு மனைகளை அளவீடு செய்து பயனாளிகளுக்கு இடத்தை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மனித உரிமை ஆணை யத்தில் புகார் அளித்தனர்.புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையர் 27 ஆண்டு காலமாக இம்மக்களை அரசு நிர்வாகம் அலைகழித்ததால், காலதாமதம் செய்த அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த குடும்பத்திற்கும் ரூ. 25 ஆயிரம் அபராத தொகையாக செலுத்த வேண்டும் என்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தை 3 மாத காலத்திற்குள் அள வீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தர விட்டார். இதன் பின்னரும் அதிகாரி கள் நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை.
சிபிஎம் போராட்ட அறிவிப்பு
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 27 அன்று திருவள்ளூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், அடுத்த ஒரு மாதத்திற் குள் ராஜா நகர் ஆதிதிராவிட மக்கள் வீடுகள் கட்ட மாவட்ட நிர்வா கம் அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியி ருக்கும் போராட்டத்தை நடத்து வோம் என்று எச்சரித்தார். இதையடுத்து வியாழனன்று (ஜூன் 2) திருத்தணி கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் வருவாய்த் துறையினர் ராஜா நகரில் ஆதி திராவிடர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்
மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்
27 ஆண்டுகளாக அலைக் கழிக்கப்பட்டு வந்த தலித் மக்களின் உரிமை, சமூக நீதி நிலைநாட்டப் பட்டுள்ளதாக கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் தெரிவித்துள்ளார். இதற்காக நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வா கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். இப்பகுதி மக்களுக்கு மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், தலித் பகுதி மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் காவல் துறையின் பாதுகாப்போடு வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் தலித் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும் உரிய பாது காப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வா கம் செய்துதர வேண்டும். கும்முடிப் பூண்டி அருகில் உள்ள தோக்கமூர் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் வீடுகளை சுற்றி எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றவேண்டும், அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நடப்பட்டுள்ள சிமெண்ட் கம்பங்களை அகற்ற வேண்டும். நிலமற்ற 96 தலித் குடும் பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். திருவள்ளூர் வட்டம் விஷ்ணு வாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடையை அரசு தீர்மானித்த இடத்திலேயே அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றவேண்டும் என்று கோபால் கேட்டுக் கொண் டுள்ளார்.