திருவள்ளூர், பிப் 24- நூறு நாள் வேலைத் தளத்தில் அதிகாலை வரவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (பிப் 24) சோழவரம் பிடிஒ அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத் தளத்தில் காலை 7 மணிக்குள் வரவேண்டும் என்பதால், வீட்டில் உள்ள பிள்ளைகளின் கல்வி பாதிக்கிறது, குறிப்பாக மதிய உணவு கூட சமைக்க முடிய வில்லை, மற்ற பணிக்கு செல்பவர்கள் பாதிக் கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கிராமத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது.இந்த செயல் நூறு நாள் வேலையை அழிக்கும் நடவடிக்கைக்கு இட்டுச்செல்லும் என்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தினக்கூலியாக ரூ.600வழங்க கோரியும், ஒன்றிய பாஜக அரசு நூறு நாள் வேலைக்கு பட் ெஜட்டில் நிதியை வெட்டி யதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.சரளா தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டசெயலாளர் அ.து.கோதண்டன், மாவட்ட துணை நிர்வாகி கள் இ.தவமணி, பாஸ்கரன், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், துணை நிர்வாகிகள் இ.ரவி, சி.மனோகரன், ஜி.மனோன்மணி ஆகியோர் பேசினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.