திருவள்ளூர், மார்ச் 10- டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழ னன்று ( மார்ச் 10) அன்று திருவள்ளூரில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கேசவன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கை உருவாக்கி அமல்படுத்திட வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கட்டையில் வேலி அமைத்த செலவினத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மேல்முறையீடு செய்யாமலும், சட்ட திருத்தம் செய்யாமலும் மதுக்கூடங்களை மூடிட வேண்டும் என்றும் , டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் மதுபானக் கூட உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரன், சிஐடியு மாவட்ட துணை நிர்வாகிகள் யோகராஜ் திருநாவுக்கரசு, நந்தகோபால், வெங்கடேசன், வசந்த், விசுவநாதன், முருகன் உள்ளிட்ட பலர் பேசினர்.