districts

நில மோசடி கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜன 30- கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் தயாரித்து,  பத்திர பதிவு செய்தவர் வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டு ள்ளது,.  கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரத்திவி நகரை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர், சலீம் என்பவரிடம் 2008-ல்  693-சதுர அடி அளவிற்கு வீட்டுமனை வாங்கியுள்ளார். தான் வாங்கிய நிலத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப போகும் போது, பக்கத்து வீட்டுக்காரர் தனசேகர் என்பவர் அது எனக்கு சொந்தமான நிலம் என்று சொல்லி தடுத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தமிழ்செல்வி புகார் கொடுத்துள்ளனர்.வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். தமிழ்செல்விக்கு  சொந்தமான பட்டா நிலத்தை அபகரிக்கும் நோக்கத்து டன் போலி ஆவணம் தயாரித்து கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலு வலகத்தில் தனசேகர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த போலி பத்திரபதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்செல்வி பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவுத்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகி யோருக்கு புகார் அளித்தார்.

இது குறித்து  பத்திரப்பதிவுத் துறை தலை வர் விசாரணை நடத்தியதில்  தன சேகரின் பத்திரத்தில் ஒரு பக்கம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது, கையேழுத்து, முத்திரை எண்கள் திருத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், வட்டக் குழு உறுப்பினர் ப.லோகநாதன் ஆகியோர் கூறுகையில் தனசேகர் கிரைய  பத்திரத்தை ரத்து செய்து,  பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். நில மோசடியில் ஈடுபட்ட  தனசேகரன் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணி யாற்றிய ஊழியர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரப்பதிவு துறை மாவட்ட தலைவர் தனது  விசாரணை அறிக்கையில் தெரி வித்துள்ளார்.இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி அப்பாவி மக்கள் நில மோசடி கும்பலிடம் மாட்டிக்  கொண்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை விசாரிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.