திருவள்ளூர், மார்ச் 15- ஈகுவார்பாளையம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் சித்தூர் நத்தம், காரம்பேடு, பெரிய பாளையத்து கண்டிகை, கோங்கல், குமாரநாயக்கன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இதில் ஈகுவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் 12 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு நிலத்தில் குளம், ஆடு, மாடுகள் செல்லக்கூடிய வழிபாட்டை, பொது கிணறு, மதகு, கல்வெட்டு ஆகிய வற்றையும் ஆக்கிரமித்துள்ளார். மேலும் சமவெளி பகுதியில் இருந்த 200 க்கும் மேற்பட்ட பனை மரங்கள், செடி, கொடிகள் என எல்லாவற்றை யும் அழித்துள்ளார். பொது கிணற்றை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ள நிலத்தில் உள்ள குளத்தின் கரை, மதகு, கல்வெட்டு உள்ளிட்ட வற்றை சிதைக்கும் வகையில் சிரஞ்சீவி தன் டிராக்டர் மூலம் சமன் செய்துள்ளார். இதனை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த மோகன், சந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யர் ஏ.ரவி ஆகியோர் தடுத்துள்ளனர். இவர்களை சிரஞ்சீவி கடுமையாக தாக்கியதோடு நியாயம் கேட்ட ரவி உள்ளிட்ட சிலர் மீது பொய் புகார் அளித்துள்ளார்.
சிபிஎம் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் ஏ.ரவி உள்ளிட்ட சிலர் மீது மாதர்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து திட்ட மிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள் ளதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசு நிலங்களையும் மீட்டு ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.