districts

img

போராட்டத்தால் பேருந்து இயக்கம்: மாணவர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர், ஏப் 15- பெரியபாளையம் ஏனம்பாக்கம் வழித் தடத்தில் தடம் எண் 92பி பேருந்தை  இயக்க  கோரி நடத்தப்பட்ட மறியல் போராட்டம் வெற்றி பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்,ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, மாளந்தூர் வழி யாக ஊத்துக்கோட்டைக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பேருந்து  தடம் எண் 92 பி இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பெருந்தொற்றுக் காலகட்டத்தில் இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் பெரியபாளையத்திற்கு பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் மிக வும் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த வழித் தடத்தில் மீண்டும் பேருந்தை இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும்  நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இந்நிலையில், புதனன்று (ஏப்.13)  சிபிஎம்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பள்ளி  செல்ல  பேருந்து வசதி இல்லாத மாணவர்கள்  சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலை யில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்துக்கோட்டை வட்டச் செயலாளர் கண்ணன், வட்டக் குழு  உறுப்பினர்கள் அருள், ரமேஷ், ரம்யா, வழக் கறிஞர் கன்னியப்பன் உள்ளிட்டோர் மாண வர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரி கள், ஊத்துக்கோட்டை பணிமனை மேலாளர் ஹரிபாபு  ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு நடத்தினார். பின்னர் அந்த  வழித்தடத்தில் அன்று மாலையே பேருந்து இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மாளிகைப்பட்டு கிளைச் செயலாளர் ஜெயபாரதி தலைமை தாங்கினார்.  உத்துக்கோட்டை வட்டச் செயலா ளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப் பினர்கள் கே.ரமா, ஏ.பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.