districts

img

ராக்கெட் லாஞ்சரை  செயலிழக்க முயற்சி

பெரியபாளையம்,டிச.4- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் சனிக்கிழமை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டு எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? அது எப்படி இங்கு வந்தது? என ஆய்வு செய்தனர். மேலும், இப்பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். கண்டெடுக்கப்பட்ட ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது. அதனைத் செயலிக்க செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.