திருவள்ளூர், மார்ச் 13- தச்சூர் முதல் சித்தூர் வரை 6வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் ஞாயிறன்று (மார்ச்-13) பெரியபாளையத்தில் நடைபெற்றது. 6-வழிச்சாலைக்கு நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு 2013-நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும், இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுப்பது, மார்ச்18 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் கோரிக்கைகள் சம்மந்தமாக வலியுறுத்துவது, ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாவட்ட செயலாளர் பி.துளசி நாராயணன், துணை நிர்வாகிகள் பி.ரவி, எம்.பழனி, விவசாயிகள் விஸ்வநாதன், ராமதாஸ், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆலப்பாக்கம், வடமதுரை, பேரண்டூர், தொலவேடு, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.