districts

img

மாட்டுத்தொழுவமா? பேருந்து நிலையமா?

திருவள்ளூர், டிச 9- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள், பேருந்து நிலையம், மருத்துவமனை, நீதி மன்ற வளாகம், பொன்னேரி எல்என்ஜி கல்லூரி மற்றும் அனைத்து முக்கிய சாலை களிலும் ஏராளமான மாடுகள் இரவு, பகலாக சுற்றித் திரிகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்தச் சூழலில் விபத்துகளை தடுக்கும் விதமாக சாலைகளில் சுற்றித்திரி யும் மாடுகளை அகற்ற வேண்டும், அதன் உரிமைகளார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி நகர கிளைச் செயலாளர் எல்.கோபிநாதன் நவம்பர் 24 அன்று ஆணையரிடம் மனு அளித்தார். இதையடுத்து நகராட்சி கூட்டத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆனால் இதுவரை அதற்குண்டான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக சாலை களில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கடும் மழை பெய்யும் சூழலில், பேருந்து நிலையத்தில் மாடுகள் நிற்பதால், பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே நகராட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என சிபிஎம் பொன்னேரி பகுதிச் செயலாளர் எஸ்.இ.சேகர் எச்சரித்துள்ளார்.