திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோபிநாத், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முருகன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.