districts

டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி

திருவண்ணாமலை, நவ. 21- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). இவர் டிராக்ட ரில் டிப்பர் இணைக்கப்பட்டு அதன் மூலம் 15 பெண்களை ஏற்றிக்கொண்டு போளூர் அருகே உள்ள முருகாபாடி அடுத்த ஒகூர் பகுதியில் மஞ்சம் புல் அறுப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது போளூர் செல்லும் பைபாஸ் சாலை யில் உள்ள வ.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே  சென்று கொண்டிருந்த போது டிராக்டரின் பின்புறம் இருந்த டிப்பர் திடீரென நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்ததில், அதில் இருந்த  15 பெண்களும் சிக்கிக் கொண்டனர். படுகாயம் அடைந்த வர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள போளூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில்  பரமேஸ்வரி (50) சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் ஓட்டுனர்  சூர்யா உட்பட 14 பெண்க ளும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.