districts

தனியார் வங்கி ஊழியர்கள் மீது நெசவாளி புகார்

திருவண்ணாமலை,ஜூன்6- போளூர் தாலுகா களம்பூரை சேர்ந்த சுப்பிர மணி மகன் ஏழுமலை. இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். 2019ஆம் ஆண்டு ஈக்விடாஸ் என்கிற தனியார் வங்கியில் வீட்டின் உடமைகளை ஈடாக வைத்து கடன் பெற்றுள்ளார்.அதனை திருப்பி செலுத்தி வந்துள்ளார்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் இவரது வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள், கடன் மற்றும் தவணை வசூல் செய்து சென்றுள்ளனர்.  ஆனால், ரசீது வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கி ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டி வருவதாக ஜூன் 6 அன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் அளித்தார்.