districts

img

பயத்தில் தவித்தோம்: ஆரணி மாணவி

ஆரணி, மார்ச் 1- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி தயாளன்-பரமேஸ்வரி தம்பதி கள். இவர்களுக்கு தீபா லட்சுமி, வனிதா என 2 மகள்கள் உள்ளனர். இதில் தீபலட்சுமி உக்ரைன் உஸ்மாராத் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி யில் முதலாமாண்டு படித்து வருகிறார். உக்ரைன்,  போரால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். உணவு கிடைக்காமல் மாணவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். தமிழக மாணவர்களை மீட்க ஒன்றிய அரசும், தமிழக அரசும் ஏற்பாடு செய்து வருகிறது. இதையடுத்து திங்கட்கிழமை நள்ளிரவு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மாணவி தீபலட்சுமி சென்னை விமான நிலையம் வந்தார். நாடு திரும்பிய மாணவர்களை வெளிநாடு வாழ் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் மாணவி ஆரணி வந்தார். அப்போது மாணவி தீப லட்சுமி கூறுகையில்,“ உக்ரைனில் குண்டு மழை பொழிந்த தால் நாங்கள் மனதளவில் பயத்தில் தவித்தோம். வெளியுறவு அமைச்சகம் மூலம் தங்களை பத்திரமாக மீட்ட ஒன்றிய அரசுக்கும், அதற்கு கோரிக்கை விடுத்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.