திருவண்ணாமலை, ஜன. 27- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் வீரளுர் ஊராட்சியில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார். வீரளுர் ஊராட்சியில் அருந்ததியர் காலனியை சேர்ந்த பெண்ணின் சடல த்தை பொது வழியில் எடுத்து சென்றதற் ்காக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பாதிப்படைந்த பகுதியினை தாமாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்தின் துணைத்தலைவர் அருண் ஹால்டர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். முன்னதாக,காவல்்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடைபெற்ற சம்பவம் ்குறித்து கேட்ட றிந்த அவர் மேல் சோழங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாதிக்க ப்பட்ட மக்களிடம் விவரங்களை கேட்ட றிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட் அநீதி குறித்து ஊடகங் ்களில் பரப்பரப்பாக பேசப்படுகிறது, பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்த பிறகு, மாவட்ட நிர்வாக ரீதியான உயர் அலுவலர்களிடம் பேசி னேன்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்த மாதிரியான கொடுமைகள் நடை பெறுவது மிகப்பெரிய அநீதி யாகும்.இந்தபகுதியில்300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தாங்கள் வாழ்வதே கடினமாக உள்ளது என்றும் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்ற கேள்வியும் எழுப்பி யுள்ளனர். ஒரு அருந்ததியின பெண்ணின் சடலத்தை எடுத்து ்செல்லும் போது நடந்த இந்த விப ரீதம் வெட்கக்கேடானது. இந்த மாதிரி யான சம்பவங்கள் தடுக்கப்பட வேண் டும் என்றார். குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இந்த தெருவில் சடலத்தை எடுத்து செல்லலாம் என்பது மிகவும் கண்டிக் ்கதக்கது. இதற்கு மேல் எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் ஆணை யம் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்காது. ஆணையம் மற்றும் நிர்வா கம் இந்த பிரச்சனையால் பாதிக்கப் ்பட்டோருக்கு தகுந்த நிவாரணங்களை வழங்கும் என்று தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்மதப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைத்தின் மூலம் பரிந்துரைத்துள்ளேன்.
அரசு மற்றும் நிர்வாக ரீதியாக ஏதாவது குறைப்பாடுகள் இருந்தால் அதையும் கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப் ்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரணங்கள் வழங்கப்படும் என்றார் உடன் தாழ்த்தப்பட்ட தேசிய ஆணையத்தின் இயக்குநர் சுனில் குமார் பாபு, அரசு முதன்மை செய லாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலம் முனைவர். மணி வாசகம், ஆதிதிராவிடார் நலத்துறை ஆணையார் மதுமதி, காவல் துறை இயக்குநர் டி.கே.ரவி, கூடுதல் காவல் துறை இயக்குநர் தாமரைக்கண்ணன், காவல் துறை தலைவர் சந்தோஷ்குமார் (வடக்கு மண்டலம்), செந்தாமரைக்கண்ணன், (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), காவல் துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, (வேலூர் சரகம்), திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலு வலர் மரு.பிரியதரிஷினி உள்ளிட்டோர் இருந்தனர்.