திருவண்ணாமலை, டிச. 30- தமிழகம் முழுவதுமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து ஒன்றிய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5 வரை கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத் தூர். திருவண்ணாமலை, தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் 93.46 மதிப் பெண்கள் பெற்று முதலிடம் பிடித் துள்ளது. குஜராத் மருத்துவர் வியாஸ், சிக்கிம் மிக்கியா லேப்சான் ஆகியோர் கொண்ட குழு இந்த சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தது. இங்கு அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு போன்றவற்றில் சிறப்பான செயல்பாடு உள்ளதாக தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை ஒன்றிய அரசு மூலம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரத்த வங்கி, கூடுதல் கட்டிடம், அறுவை சிகிச்சை மையம், கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படஉள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு வசதி கள் செய்து தருவதன் மூலம் மேல்வில்வராயநல்லூர். மேலாரணி, சேங்கபுத்தேரி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.