திருவண்ணாமலை,ஏப். 24- செய்யாறு கொட நகர் பகுதியில் ஞாயிறன்று (ஏப்.24) காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்க கிளை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யனார் காட்டுநாயக்கன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் சங்க கொடியை ஏற்றி, பெயர் பலகை, கல்வெட்டை திறந்து வைத்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். மாரிமுத்து, காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், மாநில பொருளாளர் தயாளன், மகளிர் அணி தலைவர் பார்வதி, கிளை நிர்வாகிகள் ஏழுமலை, சிவகாமி, சூர்யா, பாஸ்கர், லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.