ஆசிரமத்திற்கு சீல்வைக்க வேண்டும்: மாதர் சங்கம்
திருவள்ளூர், மார்ச் 11- மாணவி மரணத்திற்கு காரணமான வெள்ளாத்துக் கோட்டை ஆசிரமத்திற்கு சீல்வைத்து போலிச் சாமியார் முனுசாமியை கைது செய்து,விசாரிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரியிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பூசாரி முனு சாமியால் ஹேமமாலினி என்ற பெண் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பலமர்மங்கள் உள்ளன. முதலுதவி செய்ய மறுத்த வெங்கல் தனி யார் மருத்துவரின் மீதும் உயிரிழந்த ஹேம மாலினியின் செல்போனின் தரவுகளை மறைத்த சாமியார் உள்ளிட்ட குற்ற வாளிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது, உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களைகொண்டு வீடியோ பதிவுடன் மாணவி யின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து மரணத் திற்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும். பாலியல் ரீதியாக அணுகுவது, வெளியில் தெரிவித்தால் மந்திரம் செய்து விடுவேன் என மிரட்டும் போலிச்சாமியார் முனுசாமி மீது உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து கைது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட் டுள்ளது.
பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
சேத்துப்பட்டு, மார்ச் 11 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கொங்காபுரம் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது முகாமிற்கு சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாறுதல் புதிய பட்டா பெயர் திருத்தம் முகவரி மாற்றம் உள்ளிட்ட நிள அளவை துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36 பேர் மனு அளித்திருந்தனர். இதில் உரிய ஆவணம் உள்ள 7 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக நலத்திட்ட உதவிகளை வழங்கி பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திராஇளங்கோவன் பேசினார்.
பயணப்படியை உயர்த்துக: தோட்டக்கலை அதிகாரிகள்
திருவண்ணாமலை, மார்ச் 11- தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சு.மருதாசலம் கலந்து கொண்டு பேசினார். உதவி தோட்ட கலை அலுவலர்களுக்கு பயணப்படி மாதாமாதம் ரூ.600 வழங்கப்படுகிறது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ரூ.6000 வழங்க வேண்டும். 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவி தோட்ட கலை அலுவலர்கள் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் நிபந்தனையை ரத்து செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.