districts

img

தையல் தொழிலாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை, மார்ச்.21- திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழி லாளர் சங்கம் சார்பில், ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போரா ட்டம் திங்களன்று (மார்ச் 21) நடைபெற்றது. திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம் மற்றும் வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டு றவு சங்கத்தில் புதிய உறுப்பி னர்களை சேர்க்க  வேண்டும், தகுதியானவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த  மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செய லாளர் எம். வீரபத்திரன்  கோரிக்கை விளக்கி பேசி னார். சிஐடியு மாவட்ட செய லாளர் இரா.பாரி,   தையல் சங்க மாவட்டத் தலைவர் ஏ.மேரி, நிர்வாகிகள் ஆர்.சரவணன், அப்துல் காதர், தமிழ்ச் செல்வி, செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.