districts

ஆதிதிராவிடர் நிலம் வாங்க மானியம்

திருவண்ணாமலை, நவ. 29- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சாராத பிற வகுப்பை சேர்ந்த வர்களிடமிருந்து விவசாய நிலம் வாங்க அரசு வழிகாட்டு மதிப்பு அல்லது சந்தை மதிப்பு தொகையில் 50 விழுக்காடு மானியம் (அதிகபட்ச மானியம் ரூ. 5 லட்சம் வரை) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விண்ணப்பதாரார் விவ சாயத்தைத் தொழிலாக கொண்டிருக்க வேண்டும். மேலும் விவசாயக் கூலி வேலை செய்பராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் 18 வயது முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பம் செய்த மகளிரின் பெயரில் அல்லது மகன்கள் அல்லது கணவரின் பெயரில் மட்டுமே நிலம் பதிவு செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்க ளுக்கு 100 விழுக்காடு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் வாங்கப்படும் நிலத்தை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று (ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்திற்கான கிரைய ஒப்பந்த பத்திரம், வாங்க உள்ள நிலத்தின் சிட்டா, அடங்கல், அ.பதிவேடு, வில்லங்க சான்று நிலத்திற்கான அரசு வழிகாட்டு மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு (சார்பதி வாளரிடம் பெற வேண்டும்) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், வேங்கிக்கால், திரு வண்ணாமலை (தொலைபேசி எண். 04175-232366) என்ற முகவரியில் விவ ரங்களை பெற்றுக்கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.