திருவண்ணாமலை, மே 11 திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் மே 10ஆம் தேதி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பேருந்தில் ஏற முயற்சி செய்தனர். அப்போது, சிட்கோ பணி மனை பேருந்து ஓட்டுனர் ரவி என்பவர், மாணவர்கள் பாது காப்பான முறையில் பேரு ந்தில் பயணம் செய்ய வேண் டும் என அறிவுறுத்தினார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநரை தாக்கினர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் ரவி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். அவரை, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் கே.நாகராஜன் உள்ளிட் டோர், நேரில் சென்று விசா ரித்தனர். போக்குவரத்து ஊழியர்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காயமடைந்த ஓட்டுநருக்கு உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.-