திருவண்ணாமலை, பிப். 7- தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் வேட்பாளரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரண மல்லூர் பேரூராட்சியின் 1ஆவது வார்டு பகுதியில் உள்ளது காந்தி நகர். இங்கு குடிநீர் பிரச்சனையை போக்க தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்துத் தர வேண்டும், ரேசன் பொருட்கள் வாங்க 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி யுள்ளாதால், தனியாக ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மா.கவுதம் முத்துவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தான் வெற்றி பெற்றதும் பொது மக்க ளின் இரண்டு கோரிக்கைகளையும் நிறை வேற்றுவதாக சிபிஎம் வேட்பாளர் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் நம்பிக்கையுடன் வாக்களிப்ப தாக கூறி வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.