திருவண்ணாமலை, ஜன.19- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே மேல் செண்பகத் தோப்பு, கீழ் செண்பகத் தோப்பு, பால மதி உள்ளிட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் ஐந்து தலைமுறை களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி யில் அணை கட்டப்பட்ட பிறகு, ஆற்றின் கரையோரங்களிலுள்ள கிராமங்க ளுக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாண வர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின ரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் சூழ்ந்த சாலையை சமீபத்தில் கடந்த செண்பகத் தோப்பு பகுதியைச் சேர்ந்த சேகர், குப்பு சாமி ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயி ரிழந்தனர். பொதுமக்களின் அவசர, அவசிய தேவையை கருத்தில் கொண்டு செண்பகத் தோப்பு ஆற்றங்கரையோரம் உள்ள நீர் தும்பை, முருக மந்தை, புளியங்குப்பம், காவூர், கவம்பட்டு உள்ளிட்ட கிராமங்க ளுக்கு சென்று வரும் வகையில் செண்பகத் தோப்பு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து கொடுக்க வேண்டும். தண்ணீர் வெளியேறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப. செல்வன், எஸ் .ராமதாஸ், மேல் செண்பகத் தோப்பு கண்ணய்யன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.