districts

img

விளையாட்டு திடல்: சிபிஎம் வேட்பாளர் வாக்குறுதி

திருவண்ணாமலை, பிப். 7- வந்தவாசி நகரத்தில் விளையாட்டு திடல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிஎம் வேட்பாளர் உறுதியளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21ஆவது வார்டு தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளராக ந.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். வேட்பாளர் ராதாகிருஷ்ணன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது விளையாட்டுத்திடல் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் விடுத்த கோரிக்கையை சிபிஎம் வேட்பாளர் ஏற்றுக்கொண்டு வாக்குறுதி கொடுத்தார்.