districts

பெரணமல்லூர் சிபிஎம் வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை,பிப் 22- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக கூட்டணி சார்பில்  போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  வேட்பாளர்  மா. கௌதம்  முத்து 111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த வார்டில் பாமக வேட்பாளர் அபிராமி, அமமுக வேட்பாளர் கருணா கரன், அதிமுக வேட்பாளர் வீரமணி ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான 416 வாக்குகளில் சிபிஎம் வேட்பா ளர் கௌதம்முத்து 231 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 120 வாக்குகளும்,  அதிமுக வேட்பாளர் 57 வாக்குகளும், பாமக வேட்பாளர் 8 வாக்குகளும் பெற்றனர். இதில் 111 வாக்குகள் வித்தி யாசத்தில் கௌதம் முத்து வெற்றி பெற்றார்.