districts

img

மூட்டைக்கு ரூ 10 கூலி வழங்குக : சுமை தூக்கும் தொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்

திருவண்ணாமலை, ஜூலை 31- திருவண்ணாமலை மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 4 ஆவது மாநாடு செய்யாறு சமாதியான்குளம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வே.சங்கர் தலை மையில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் இரா .பாரி, மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டப் பொருளாளர் வி. எம். வெங்கடேசன், குடிநீர் வடிகால் வாரிய சங்க மாவட்டச் செயலாளர் எஸ். செல்வம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அப்பா சாமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், கவுரவத் தலைவர் பி. பிரபு, மாவட்டப் பொருளாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகள்
17 பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலைவராக வே. சங்கர், மாவட்டச் செயலாளராக இரா.பாரி,  பொருளாளராக எ.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, மூட்டை ஒன்றுக்கு ஏற்றுக் கூலி, இறக்கு கூலி யாக ரூ10 வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் இயற்கை மரணத் திற்கு ரூ. 2 லட்சமும், விபத்து மரணத்தின் போது ரூ,5 லட்சமும் வழங்க வேண்டும், திருமண உதவித்தொகை 50 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 3500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. நிறைவாக சி.பி. பிரபு நன்றி கூறி னார்.