districts

img

புற வழிச் சாலைக்காக விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

திருவண்ணாமலை,நவ.22- செங்கம் அருகே விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு செய்யாமல் விளை நிலங்களை கையகப்படுத்தும் போக்கை கண்டித்து, விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் - போளூர் மாநில தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சந்திப்பு சாலை முதல், செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை உள்ள மண்மலை புறவழிச் சாலை வரை, செங்கம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.  இதற்கான பணிகள் அந்த பகுதிகளில் துவங்கியுள்ளது. இந்நிலையில் கோலந்தாங்கல் பகுதி யில் உள்ள விவசாய விளை நிலங்களில், விவ சாயிகளிடம் முன்னறிவிப்பு செய்யாமல், விளை நிலங்களை கையகப்படுத்த திங்க ளன்று அளவீடு செய்துள்ளனர். இதைக் கண்டித்து விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் கருப்பு கொடி கட்டி, செவ்வாயன்று (நவ. 22) குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.