திருவண்ணாமலை, மே. 22- திருவண்ணாமலை மாவட்ட தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு ஞாயிறன்று வேங்கிக்கால் முத்தம்மாள் நகர் அலுவலகத்தில் நடை பெற்றது. மேரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் எம். ஐடா ஹெலன் சிறப்புரையாற்றினார், சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.வீரபத்திரன், சிஐடியு மாவட்ட தலைவர் கே. காங்கேயன், மாவட்ட செயலாளர் பாரி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் தண்டபாணி, வந்தவாசி அப்துல் காதர், பொருளாளர் சி.எஸ்.மணி, து.செய லாளர் பி.சுந்தர், வந்தவாசி வட்டச் செயலாளர் எம்.ஜீனத், கட்டுமான சங்க பொதுச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 60 வயதான தையல் தொழிலாளர்க ளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 3000 வழங்கிட வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்க வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் தையல் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசு இலவச தையல் இயந்திரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் மாவட்ட தலைவராக அ.மேரி, பொதுச் செயலாளராக எம்.வீரபத்திரன், பொருளாளராக சி.எஸ். மணி ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டன.