திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிப்பறையை பயன்படுத்த பத்து ரூபாயும், இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு 20 ரூபாய் வசூலிப்பதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், வாசுகி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்வி, நகரக் குழு உறுப்பினர்கள் இலியாஸ் சர்க்கார், சரவணன் ஆகியோர் பேசினர்.