திருவண்ணாமலை,அக்.6- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை முறையாக நடத்தக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி கள் சார்பில் வியாழ னன்று(அக்.6) போராட்டம் நடந்தது. திருவண்ணாமலையி லுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி இளங்கலை பாடப் பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது முறைகேடு நடந்துள்ளதால் சேர்க்கையை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும், இன சுழற்சி முறை (இடஒதுக்கீடு) அடிப்படை யில், தகுதியுள்ள மாண வர்கள் சேர்க்கை முழு விவ ரங்களை வெளியிட வேண்டும், பல்கலைக்கழக நிர்வாக வழிகாட்டுதலை பின்பற்றாமல், தன்னிச்சை யாக செயல்படும் கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடந்த கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபி எம் செயற்குழு உறுப்பினர் கள் எம்.வீரபத்திரன், ப. செல்வம்,எ.இலட்சுமணன் மற்றும் ராமதாஸ் விசிக மாவட்டச் செயலாளர் செல்வம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் தமிழ்பாரதி, மாவட்டச் செய லாளர் கோபிநாத், , வாலிபர் சங்கம் மாவட்டச் செய லாளர் சி.எம். பிரகாஷ், மாவட்டத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அரசு கலைக்கல்லூரி சார்பில், கல்வி மண்டல இணை இயக்குநர் ராவணன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, காலியாக உள்ள இடங்களுக்கு திரு வள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி யுடன், வரும் 11 ஆம் தேதி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர், போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.