திருவண்ணாமலை, ஏப்.4- இந்தியா கூட்டணி சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் சி.என். அண்ணா துரை, ஆரணி தொகுதியில் போட்டி யிடும் எம்.எஸ். தரணிவேந்தன் ஆகி யோருக்கு உதயசூரியன் சின்னத் தில் வாக்கு சேகரித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அந்த உரையின் சுருக்கம் வரு மாறு:
மோடிக்குத் தெரிந்துபோன தேர்தல் தோல்வி
‘பாஜக ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும்’ என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகி விட்டார்கள். இந்த நல்ல செய்தி, திருவண்ணா மலையில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல – தென்மாநி லங்களில் மட்டுமல்ல – வடமாநி லங்களில் இருந்தும் – ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது! இந்தச் செய்தி யை நன்றாக உணர்ந்திருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ் வொரு நாளும், ஏதாவது பொய்யை யும், புரளியையும் கிளப்பி – மக்க ளைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்கிறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரி யும்!
உத்தரப்பிரதேசத்தில் கச்சத்தீவைப் பேசுவது தோல்வி பயமே!
அதனால்தான், இப்போது பயத் தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் ஐ.டி (Income Tax) துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நட வடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்!
அதேபோல், இ.டி. (Enforce ment Department) யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்ம திக்கிறார்… இ.டி. – ஐ.டி. – சிபிஐ (C.B.I.) – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது தகவல் ஆணையத்தை யும் (R.T.I.) கூட்டணியில் சேர்த்தி ருக்கிறார். இனிமேல் மோடி சொன் னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்ட தால்– R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கி றார். மோடி குழப்பத்தில் இருக்கி றார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதி லேயே தெரிகிறது.
சூட்டிங் பேட்டியிலும் உண்மை பேசாத மோடி
சமீபத்தில் வேட்டி-சட்டை எல் லாம் போட்டு, தமிழ்த் தொலைக் காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந் தார்! அதிலாவது உண்மையைப் பேசினாரா?
பத்தாண்டுகால பாஜக ஆட்சி யில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப் புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்… தமிழக மக்களும் கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை! அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்த வர்கள், அது நியூஸ் டைம்-ஆ? இல்லை, காமெடி டைம்-ஆ? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார் கள்! ஏன் என்றால், அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கும் - தனக் கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்... பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!
ஆறுதல் சொல்ல வராத பிரதமர்
அடுத்தடுத்து இரண்டு இயற் கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும் - பாதிக்கப்பட்ட மக் களுக்கு உதவி செய்யவும் – 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறு தல் சொல்லவில்லை! கேட்ட நிதியையும் தரவில்லை!
ஆனால் என்ன சொன்னார் தெரி யுமா? “நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனை அனுப்பி வைத்திருக்கி றேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னி டம் பிரதமர் மோடி சொன்னார்.
நிர்மலா சீதாராமன் வந்தார் நிவாரண நிதி வரவில்லை
சொன்னபடி, நிர்மலா சீதா ராமன் மட்டும்தான் வந்தார், நிதி வர வில்லை! நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட் கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார்.
ஆணவச் சிந்தனை கொண்ட அவர் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந் தாயிரம் கோடியைக் கொடுத்து விட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்து வட்டிக்காரர் போன்று பேசியிருக்கி றார்.
பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?
பொதுவாக A.D.B. – K.F.W. மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் – அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக் கிற்கு வந்துதான் மாநில அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்த தாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் – பொருந்தச் சொல்லுங்கள் அம்மையார் நிர் மலா சீதாராமன் அவர்களே… ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லா மல் – உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள்…
“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்!”
எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடு கிறார்.
ஆணவக் கணக்கு தப்புக் கணக்காகி விடும்
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசி னால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர் கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள்!
நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன்… நாங்கள் கேட்கும் நிதி, N.D.R.F. என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கி றோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்தி ருக்கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கி றோம்.
எங்களுக்கு தர வேண்டியதை கேட்டால் கேலி செய்வீர்களா?
நிர்மலா சீதாராமன் கொடுத்த தாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டா லும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண் டிய S.D.R.F. என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே... வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டைப் பார்த்தால், அவர் களுக்கு நக்கலாகத்தான் இருக்கி றது! பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை!
வெறுப்பாட்சியை அகற்றி நல்லாட்சி அமைப்போம்!
இந்தத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும் – சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் தேர் தல்! மதவாதத்திற்கும் - மதச்சார் பின்மைக்கும் நடக்கும் தேர்தல்! பாஜக இழைக்கும் சமூக அநீதிக் கும் – சமூக நீதிக்கும் நடக்கும் தேர்தல்! பாஜக தலைமையிலான சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கும் – ’இந்தியா’ என்ற கொள்கைக் கூட்ட ணிக்கும் நடக்கும் தேர்தல்! வெறுப் பாட்சியை அகற்றி, நல்லாட்சியை அமைக்கவுள்ள தேர்தல்!
இ்வ்வாறு முதல்வர் மு.க. ஸ்டா
லின் குறிப்பிட்டுள்ளார்.