திருவண்ணாமலை,ஜூலை 21- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப் பட்டு நகரம் அருந்ததி யர்பாளையத்தில் 150 குடும்பங்களுக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு இல வச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதன் பிறகு, தொகுப்பு வீடும் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால், 33 ஆண்டுகளை கடந்தும்கூட வருவாய் கணக்கில் அந்த குடியிருப்பு கள் இடம் பெறவில்லை. இந்த குடியிருப்புகளை உடனடியாக வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.