districts

img

‘படுகளம்’நூல் அறிமுகம்

திருவண்ணாமலை, ஏப். 4- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில் களம் 17 நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துவேலன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் மா.கௌதம் முத்து வரவேற்றார். இணைச் செயலாளர் கவிஞர் செங்கொடி 'நிலம்' எனும் சிறுகதையை அறிமுகப்படுத்தினார். பெரணமல்லூர் சேகரனின் ‘படுகளம்’ நூலை அறிமுகம் செய்து வைத்து எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன் பேசுகையில், “தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வி யல், மகாபாரதத் தெருக்கூத்து, கூத்து சம்மந்தமான உட்கூறுகளுடனும் சிறப்பாக வெளி வந்திருக்கிறது” என்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.பிரபு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் த.ராதாகிருஷ்ணன், தமுஎகச துணைத் தலைவர் இரா.ராஜ சேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் பெரணமல்லூர் சேகரன் ஏற்புரை வழங்கினார். கிளைப் பொருளாளர் ப.தேவதாஸ் நன்றி கூறினார்.