திருவண்ணாமலை, ஜூன் 2- திருவண்ணாமலை மாவட்டத் தில் விவசாயிகள் வேளாண் அலுவலகம் முன்பு 4ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு யூரியா விற்பனை செய்ததில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளது. சில்லரை உர விற்பனை கடைகளில் 266 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு மூட்டை யூரியா, 450 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதுவும் யூரியா வாங்குபவர், கண்டிப் பாக குருணை மருந்து வாங்க வேண்டும் (சிறிதளவு ரசாயண மருந்துகளுடன், பெருமளவு களிமண் கலந்து தயாரிக்கப்படும் சிறு, சிறு உருண்டைகள்). குருணை மருந்தின் விலை பக்கெட் ஒன்றுக்கு 600 ரூபாய் என்ற விகிதத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த குருணை மருந்து குறித்து, தமிழக வேளாண் துறை எந்த தரச்சோதனையும் செய்ய வில்லை என்பது ஒரு குற்றச் சாட்டாக உள்ளது. தான் பட்டினி கிடந்தாலும், தான் வளர்த்த பயிரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில், கடை வாசலில் கால்கடுக்க காத்தி ருந்து விவசாயிகள் கூடுதல் விலைக்கு யூரியாவை வாங்கிச் சென்றனர். யூரியாவை பதுக்கி அதிக விலைக்கு விற்றது. விவ சாயிகளுக்காக அரசு ஒதுக்கிய யூரியாவை தனியார் கலப்பு உர நிறுவனங்களுக்கு தாரைவார்த்தது உள்ளிட்ட செயல்பாடுகளால் ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பல்வேறு நட வடிக்கைகளை மாவட்ட வேளாண் துறை எடுத்து வருகிறது.
விவசாயி களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் காவல்துறை மூலம் தடுப்பது, மின்சார இணைப்பை துண்டிப்பது என தொடர்கிறது. ஆனாலும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. போராட்டக் களத்திலேயே உணவு சமைக்கும் பணி நடைபெறுகிறது. மின் தேவைக்காக, பேட்டரி மற்றும் யூபிஎஸ் கருவிகள் போராட்டக் களத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில், மாவட்டத் தலைவர் எஸ்.பலராமன், மாவட்டச் செய லாளர் டி.கே.வெங்கடேசன், ஒன்றி யத் தலைவர்கள் அழகேசன், லட்சுமணன், பழனி, செயலாளர் ரஜினி ஏழுமலை, நிர்வாகி செந்தில், வழக்கறிஞர் எஸ்.அபி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொட ரும் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.