திருவண்ணாமலை,மே.11- திருவண்ணாமலை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவரின் உறவி னர்களை மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த தங்கமணி. சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி கடந்த மாதம் 26ஆம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு அமுல்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தங்கமணியை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் தங்க மணி, கடந்தமாதம் 27 ஆம்தேதி உயிரிழந்தததாக காவல் துறை யினர் தெரிவித்தனர்.இந்த நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலை வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, சிபிஎம் தண்டராம்பட்டு வட்டச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் தட்டரணை கிராமத்திற்கு சென்று தங்கமணியின் மனைவி, மகன்கள் திருமூர்த்தி, தினகரன் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். “ஒரு தவறும் செய்யாத தங்கமணியை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற, காவல்துறையினர் அடித்து துன்புறுத் தியதில் விலா எலும்புகள் உடைந்திருப்பது பிரேத பரிசோனை யில் தெரிய வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். எனவே, கொலையா ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.டில்லிபாபு கூறிய தாவது:- பழங்குடியின மக்களின் வாழ்வா தாரம் பறிக்கப்படுவதால் அந்த மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். சில இடங்களில் குற்றம் செய்யவும் தூண்டப்படு கின்றனர். விசாரணை என்ற பெயரில் தங்கமணியை அழைத்துச் சென்று சித்ரவதை செய்து, கொலை செய்த வர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தங்கமணி குடும்பத்தி னருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தங்கமணி குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கும் வரை மலைவாழ் மக்கள் சங்கம் துணை நிற்கும். இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது குறவன் பழங்குடி சங்க மாநில துணைத் தலைவர் வேலு, இளையாங்கண்ணி கிளைச் செயலாளர் அந்தோணிராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ரஜினி ஆகியோர் உடனி ருந்தனர்.