திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா திருவண்ணாமலை வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழுத்தலைவர் வளர்மதி, துணைத் தலைவர் சுமதி, பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன், காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் ரமேஷ் ராய், வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் இதில் ஆசிரியர்கள் ஆனந்தகுமார், பழனிமுருகன், சாந்தி,மணிமேகலை, கலா ஆசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.