திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேர்ந்த புதிய மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஞ்சலா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எ.கீதா, போளூர் வட்டார கல்வி அலுவலர் எ.நேரு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.