திருவண்ணாமலை, மே. 19- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் போராட்டம் நடை பெற்றது. உயர் மின் கோபுரம் வழித்தட நிலத்திற்கான இழப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இரண்டாவது போக நெல் சாகுபடி முழுவதையும் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, லஞ்சமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். யூரியா, உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுடன் இணை பொருட்களை வற்புறுத்தி கொடுக்கக்கூடாது, விவசாயிகள் கேட்கிற பொருட்களை மட்டுமே கொடுக்க வேண்டும், கூடுதல் பொருட்களை வாங்க நிர்பந்தம் செய்யும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுத்து கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவ சாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் லஞ்சம், முறைகேடுகள் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று உரை யாற்றினர். மாவட்டச் செயலாளர் டி .கே. வெங்கடேசன், நிர்வாகிகள் ஆர் .காமராஜ், உதயகுமார், ஜி. பன்னீர்செல்வம், திருமுருகன், கே .பாலமுருகன், ஆர். காமராஜ் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம் . சிவக்குமார், வழக்கறிஞர் எஸ். அபிராமன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். ராமதாஸ், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக, வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.