திருவண்ணாமலை, ஜூலை 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் எதிரொலியாக திருவண்ணா மலை நகரில் செயல்பட்டு வரும் 15 கட்டண கழிப்பிடங்கள் இலவச கழிப்பிடங்க ளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில், கழிப்பறை பயன்படுத்த 10 ரூபாய் வசூலிக்கும் பகல் கொள்ளையையும், இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு 20 ரூபாய் வசூலிப்ப தையும் கண்டித்து ஜூன் 29 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருக்கு, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை நகராட்சியில் 15 பொது கழிப்பிடங்கள் கட்டண கழிப் பிடங்களாக உள்ளன. இந்த கழிப்பிடங்க ளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தேவையற்றது. திருவண்ணாமலை நகரம் கோவில் நகரமாக இருப்பதாலும், பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் வெளி மாநிலத்தவர், வெளி நாட்டினர் என சுமார் 10 லட்சம் பேர் வரை வந்து செல்கின்றனர். பொது மக்க ளின் அடிப்படை தேவையான நகராட்சி யின் அனைத்து கழிப்பறை வசதிகளையும் பொது மக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே, திருவண்ணாமலை நகராட்சி யால் பராமரிக்கப்படும் மத்திய பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் உள்ள நவீன கட்டணக் கழிப்பறை, ஜோதி மார்க்கெட், திருவள்ளூர் தெரு - திருகூடல் தெரு இடையே கட்டப்பட்டுள்ள கழிப்பறை, ஈசான்யம் பகுதி தற்காலிக பேருந்து நிலை யம், செங்கம் ரோடு மாட்டுப்பட்டி சந்தை மேடு தற்காலிக பேருந்து நிலையம், ஈசான்யம் மைதானம் தெற்கு (கிறிஸ்துவர் கல்லறை அருகில்), போளூர் சாலை (அர்பனா ஓட்டல் எதிரில்), மத்திய பேருந்து நிலையம் (பழைய கழிப்பிடம்), மத்திய பேருந்து நிலை யம் (பயணியர் கழிப்பிடம்-2), தென் ஒத்த வாடைத் தெரு (திருமஞ்சன கோபுரம் அருகில்), துராபலித் தெரு (காந்தி நகர் மைதானம் வடக்கு பகுதி), துராபலித் தெரு (காந்தி நகர் மைதானம் தெற்கு பகுதி), வேட்டவலம் சாலை (லெபனான் பங்களா), தாமரைக்குளம், லட்சுமிபுரம் (பழைய நீதிமன்றக் கட்டடம் அருகில்) ஆகிய 15 கழிப்பிடங்களை அப்பகுதி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல முறையில் சுகாதாரமாக பரா மரிப்பது குறித்து ஆட்சியர் தலைமையில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.