திருவண்ணாமலை காந்திநகர் புறவழிச் சாலையிலுள்ள மைதானத்தில் ஏப்ரல் 8 முதல் 18ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சியர் ப.முருகேஷ் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.