districts

img

யானையின் நினைவாக சிற்ப கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை, பிப். 1- மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ண சாமி கோவிலில் யானையின் நினைவாக அமைக்கப்பட்ட சிற்ப கல்வெட்டு கண்டுபிடிக் ்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட குழுவினர் கீழ்பென்னாத் த்தூர் அருகே மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினை வாக அமைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், கீக்களூர் கோவிலில் சம்புவராயர் கால கல்வெட்டும் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேக்களூர் கோவிலில் உள்ள யானைச் ்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்ட மாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது. மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானை யின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லில் உள்ள யானையின் கீழ் யானையின் பெயரை தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப் ்பட்டுள்ளது. இதற்கு கீழ் 5 வரியில் எழுத்துக் ்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டைப் படித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், இந்த யானை சிற்பத் ்தின் கீழ் உள்ள கல்வெட்டில், ஸ்ரீபுத்தன் புவந திவாகரன் என்பவர் இந்த பட்டத்து யானைக்கு நீலகண்ட ரையன் என்று பெயர் கொடுத்துள்ளார். இது 10 அல்லது 11ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இது திருவண்ணாமலை பகுதியில் கிடைக்கும் அரிய வகை கல்வெட்டாக வரலாற்று ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். அதேபோல் கீக்க ளூர் சிவன் கோவிலில் கருவறையின் பின்புறம் உள்ள சுவரில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயரின் 2 நிலதான கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் சிமெண்ட் பூச்சுகளால் முழுமையற்று உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.