districts

img

வேளாண்மைத்துறை அலுவலகம் முற்றகை

திருவண்ணாமலை, ஜன. 31- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவ சாயத்திற்கு யூரியா வாங்க வரும் விவ சாயிகளிடம் தேவையற்ற இணை பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்து, 700 ரூபாய் வசூ லிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா வாங்கும்போது, தர பரிசோதனை செய்யப்படாத தேவையற்ற இணை பொருட்களை விற்பனை செய்வதை, பல முறை ஆதாரத்துடன் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தர பரி சோதனை செய்யப்படாத தேவையற்ற இணை பொருள் விற்பனைக்கு வேளாண் இணை இயக்குநர், உதவி இயக்குநர், தக வல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்  துணை போகிறார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 265 ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு மூட்டை யூரியாவை வாங்க வரும் விவசாயி களை மிரட்டி கட்டாயப்படுத்தி தேவையற்ற இணை பொருட்களை சேர்த்துக் கொடுத்து 700 ரூபாய் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பலராமன், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், ஜி.பன்னீர்செல்வம். பி.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.