districts

img

கிறிஸ்துவ மக்களுக்கு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, மார்ச்.21- திருவண்ணாமலை மாவட்டம், நவம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மதுரா இருதயபுரம் கிராமத்தில் 126 குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் வன்னிய கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வீடு கட்டி குடி  யிருக்கும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பல முறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட வசதி கள் செய்யப்பட்டு, வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனர். தற்போது அவர்களை சிலர் காலி செய்யச் சொல்லி வலியுறுத்தி வரு  கின்றனர். இந்நிலையில் அந்த மக்களுக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன், செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.