திருவண்ணாமலை, பிப். 15- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் இனத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லாததால், கடந்த 2013ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அவருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியது. அந்த வீட்டுமனையில் தற்போது இலவச வீடு கட்டுவதற்கு அரசாணையை வழங்கி யுள்ளது. இதையடுத்து, சுப்பிரமணி குடும்பத்தினர், கட்டுமான பணியை கடந்த 2022 டிசம்பர் 31 அன்று தொடங்கி னர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த நட ராஜன் மனைவி மல்லிகா தனது மகள் மற்றும் அடியாட்களுடன் வந்து, வீடுகட்டும் பணியை தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, கட்டுமானப் பொருட்களையும் சேதப்படுத்தினர். மேலும் அந்த இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கியதிலிருந்து, சுப்பிரமணி குடும்பத்தினரை வீடுகட்ட விடாமல், ஆதிக்க சாதியினர் பலமுறை தடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து, ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டு மானப் பணியை துவங்க வலியுறுத்தியும் கடந்த மாதம் வானாபுரம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஆனாலும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், பிப். 13 அன்று இரவு வீட்டின் கட்டுமானத்தை சிதைத்து அங்கிருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றனர். இதையடுத்து ஆதிக்க சாதியினர் மீது உரிய நடவடிக்கை எடுகக் கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் வானாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிறகு, காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வருவாய்துறை ஆவ ணங்களை ஆய்வு செய்து இனிமேல் ஆதிக்க சாதியினர் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்கிறோம், கட்டுமான பணியை தொடரலாம் என அந்த குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தண்டராம்பட்டு வட்டாரச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.