districts

img

தோழர் வி.சுப்பிரமணி படத்திறப்பு

திருவண்ணாமலை,பிப்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு உறுப்பின ரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான வி.சுப்பரமணி படத்திறப்பு மற்றும் குடும்ப நிதியளிப்பு கூட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆணை வாடி கிராமத்தில் நடைபெற்றது.  வட்டாரச் செயலாளர்.பி.சுந்தர்  தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்  என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.